வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 6 ஜூலை, 2024

பச்சைக் குழந்தைக்குப் பாலுமில்லை - ப.ஜீவானந்தம்


       ப.ஜீவானந்தம் அவர்கள் காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, நாத்திகராக, தமிழ்ப் பற்றாளராகபொதுவுடைமை இயக்கத் தலைவராக மக்கள் மனதில் நிலைத்தவர். கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவானந்தம் அவர்கள் பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர்.

பச்சைக் குழந்தைக்குப் பாலுமில்லை  என்ற இவரது கவிதைக்குச் செல்லும் முன், வள்ளுவர், பாரதியார், வள்ளலார், திருமூலர் ஆகியோரின் சிந்தனைகளை ஒப்புநோக்கிய பின் செல்வோம்

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேராதியல்வது நாடு

பசி, நோய், பகை இல்லாததே நாடு 

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றியான் 

பிச்சைக்காரர் வாழும் நாட்டைப் படைத்தவன், கெட்டு ஒழியட்டும்  என்று சினம் கொண்டார் திருவள்ளுவர்.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் மகாகவி பாரதி. 

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் இராமலிங்க வள்ளலார். 

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே

தன்னையொத்த மனிதன் பசித்திருக்கையில் கடவுட்கு ஒரு பொருளைக் காணிக்கையாக அளித்தால் அது நடமாடும் கோயிலான மனிதனுக்குச் சென்று பயன்தராது. ஆனால் நடமாடும் கோயிலான பசித்த மனிதனுக்கு ஒன்று ஈந்தால் அது இறைவனுக்குச் சென்று சேரும் என்று திருமூலர் கூறுவார்..

ப.ஜீவானந்தம் அவர்களின் கவிதைக்குச் செல்வோம் 

பச்சைக் குழந்தைக்குப் பாலுமில்லை - அதன்

பட்டினி அழுகை கேட்டதில்லை

இச்சையுடன் பாலைச் சாமிக்கென்றே கல்லில்

இட்டு வணங்குகிறார் முக்திக் கென்றே.

 சாமியைக் கல் என்று சொல்லிவிட்டாரே என்று ஜீவானந்தம் அவர்கள் மீது கோபப்படுவதைவிட

புதன், 26 ஜூன், 2024

சிலப்பதிகாரம் - காட்சிக் காதை விளக்கம்

 


மாநீர் வேலிக் கடம்பு எறிந்து, இமயத்து,
வானவர் மருள, மலை வில் பூட்டிய
வானவர் தோன்றல், வாய் வாள் கோதை,
விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து,
இளங்கோ வேண்மாளுடன் இருந்தருளி,
‘துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம்’ என,
பைந் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி,
வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்,

வெள்ளி, 7 ஜூன், 2024

திருக்குறளில் தலைமைப் பண்புகள் - Leadership Qualities in Thirukkural - (1600 வது பதிவு)

(தமிழ் இலக்கியம், கணினித் தமிழ் சார்ந்து 16வது ஆண்டாக தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கமளித்து வரும் பார்வையளார்களான உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன். )

 




தலைமைப் பண்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் பொதுவானது.  விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கூட தலைமைப் பண்பு உண்டு. ஒரு கூட்டதை வழிநடத்தக்கூடிய பண்பு தலைமைப் பண்பாகும். தலைமைப் பதவியில் இருப்பதாலேயே ஒருவர் தலைவராகிவிடுவதில்லை. தலைமைப் பண்புக்குப்  பல தகுதிகள் உண்டு.

தலைமைப் பண்புள்ளவர்களால் பதவி பெருமை பெறுகிறது. 

தலைமைப் பண்பில்லாதவர்கள் அந்தப் பதவியால் பெருமை பெறுகிறார்கள்.

பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற மூன்று பண்புகளும் தலைமைப் பதவிக்கான நற்தகுதிகளாகக் கருதலாம். திருக்குறளில் திருவள்ளுவர் தலைமைப் பண்பு பற்றிய பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்துள்ளார். நவில்தொறும் நூல் நயம் என்று அவர் சொல்லுவதுபோல திருக்குறளில் தலைமைப் பண்பு என்று தேடினால் தேடுவோர் அறிவுக்கேற்ப பல குறள்களை இனம்காண முடியும்.

திருவள்ளுவர் காலத்தில் தலைமை என்றால் அரச பதவியே இருந்திருக்கவேண்டும். இறைமாட்சி என்ற அதிகாரத்தில் அரசனின் பெருமைகளை எடுத்துரைத்துள்ளார். அரசனுக்கு அடுத்து அமைச்சர்களின் பெருமைகளை உரைத்துள்ளார். அரசனும் அமைச்சரும் மட்டும் தான் தலைமைப் பண்புக்குரியவர்களா… என்று சிந்தித்தால் அவர்கள் மட்டுமில்லை.. ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் தலைமைப் பண்பு உள்ளது ஆனால் அதைப் பலரும் உணர்வதில்லை. உணர்பவர்கள் யாவரும் தலைவரகலாம் என்பது புரியும்.

 தலைமைப் பண்புக்கான தகுதிகளாக திருக்குறளில் நான் உணர்ந்த பண்புகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்..

 

வியாழன், 23 மே, 2024

புறங்கூறாமை


நம்மைவிட நாம் மற்றவர்களைப் பற்றியே அதிகம் சிந்திக்கிறோம்..

அவர்களோடு நம்மை ஒப்பிட்டுக்கொள்கிறோம்..அந்த ஒப்பீடு சிலருக்கு  முன்னேறவேண்டும் என்று தன்னம்பிக்கையைத் தருகிறது. சிலருக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது.

 ஒருவர் இருக்கும்போது அவரது குறைகளை அவரிடமே சொல்லவேண்டும்

அவர் இல்லாதபோது அவரது நிறைகளை மட்டுமே பேசவேண்டும்..

மாறாக ஒருவர் இல்லாதபோது குறைகளையும, இருக்கும்போது நிறைகளையும் பேசுவது பலரின் வழக்கமாக மாறிவருகிறது.