வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

திருக்குறள் -அதிகாராம் - 6. வாழ்க்கைத் துணைநலம்

 

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.- 51

வருவாய்க்குத் தக்க செலவு செய்து வாழ்பளே சிறந்தவள்

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல். - 52

மனைவியின் நற்பண்பே பிற சிறப்புகளைவிட மேலானது

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை.- 53

இருப்பதும், இல்லாததும் மனைவியின் நற்பண்பைச் சார்ந்தது

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மைஉண் டாகப் பெறின்.- 54

கற்புடைய பெண்ணே உயர்ந்தவள்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை.- 55

கணவனை தெய்வமாக மதிப்பவள் சொன்னால் மழை வரும்

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண். - 56

தானும் சிறந்து, தன் கணவனையும் முன்னேற்றுபவளே பெண்

சிறைகாக்கும் காப்பவென் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை.- 57

பெண்மைக்குரிய இலக்கணத்துடன் வாழ்பவளே சிறந்தவள்

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு.- 58

கணவனைப் போற்றி வாழும் பெண்கள் வாழ்வில் உயர்வர்

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை.- 59

நல்ல மனைவியால் தான் கணவனுக்குப் பெருமிதம் தோன்றும்

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்

நன்கலம் நன்மக்கட் பேறு.- 60

பெண்ணின் பெருமை நற்பண்பு, குடும்பத்தின் பெருமை குழந்தை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக