வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 9. விருந்தோம்பல்

 

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.- 81

இல்லறத்தின் சிறப்பு விருந்தினருக்கு உதவுவதே ஆகும்

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. 82

விருந்தினர் இருக்க சாவா மருந்தானாலும் தனித்து உண்ணாதே

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று.- 83

விருந்தினருக்கு உதவுபவனுக்குத் துன்பங்கள் வாராது

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்.- 84

விருந்தோம்புபவன் வீட்டில் திருமகள் விரும்பித் தங்குவாள்

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சல் மிசைவான் புலம்.- 85

விருந்தோம்புவான் நிலம் விதைக்காமலே விளையும்    

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு.- 86

விருந்தோம்புபவனே வானவர்க்கும் விருந்தினன்

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்.- 87

விருந்தினனின் பண்பளவுக்கு விருந்தோம்பிக்குப் பயன் கிட்டும்

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்.- 88

ஆதரவில்லாத நிலை விருந்தோம்புவனுக்கு ஏற்படாது   

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு.- 89

அறிவில்லாத செல்வந்தர்களே விருந்தோம்ப மாட்டார்கள்

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.- 90

முகம் திரிந்தால் அனிச்சம்போல முகம் வாடுவர் விருந்தினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக