வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 15 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 8. அன்பு உடைமை

 

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும். -71

அன்பை அடைத்து வைக்கமுடியாது.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு. 72

அன்பிலாதவர்களுக்கே எல்லாம் சொந்தம்

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு. - 73

உயிர்களுக்குள் உறவென்பது அன்பால் அமைவது-

அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பு என்னும் நாடாச் சிறப்பு. 74

அன்பு விருப்பத்தையும், விருப்பம் நட்பையும் வழங்கும்

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு. -75

அன்பான வாழ்வே மகிழ்வானவர்களின் வாழ்க்கைப் பயன்

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை. 76

அறத்துக்கும், வீரத்துக்கும் அன்பே துணை

என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம். 77

வெயிலில் இட்ட புழுபோல் அன்பில்லாதவர்கள் வாடுவா்

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரந்தளிர்த் தற்று. -78

அன்பிலா உயிர் வாழ்க்கை பாலைவன மரம் தளிர்த்தது போன்றது

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. 79

பிற உறுப்புகளைவிட, உள்ளமே அன்பை நன்கு வெளிப்படுத்தும்

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு. 80

அன்பே உயிர், மற்றது எலும்பாலான உடம்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக