வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 17 - அழுக்காறாமை


ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு.- 161

பொறாமையின்றி வாழ்வதே ஒழுக்கத்தின் நெறி

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்.- 162

பொறாமையின்மையே பேறுகளுள் பெரும் பேறு

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்.- 163

அறமும், ஆக்கமும் வேண்டாதவரே பொறாமைப்படுவா்

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து.-164

பொறாமையால் தீயவை செய்யாதவரே அறிவுடையார்

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்காயும் கேடீன் பது.- 165

பொறாமைப்படுபவருக்கு வேறு பகை தேவையில்லை

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றிக் கெடும்.- 166

பொறாமைப்படுபவன் அடிப்படை வசதிகளின்றிக் கெடுவான்

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்.- 167

பொறாமைப்படுபவனிடம் திருமகள் நீங்கி மூதேவி தங்குவாள்

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்.- 168

பொறாமையே ஒருவனின் செல்வத்தை அழித்துக் கெடுக்கும்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்.- 169

நல்லவனின் உயா்வும், தீயவனின் தாழ்வும் நோக்கத்தக்கது

அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.-170

பொறாமையின்மையே  ஒருவனின் உயா்வுக்கு அடிப்படை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக