வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடுபொறி

திருக்குறள் தேடுபொறி


சனி, 8 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் -1. கடவுள் வாழ்த்து



அகர முதல எழுத்து எல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு- 1

எழுத்துக்களின் தொடக்கம் அகரம். உலகின் தொடக்கம் ஆதிபகவன்

கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன்

நல் தாள் தொழாஅர் எனின் - 2

கல்வியின் பயன் அறிவுடையவரை வணங்குவதே

மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்

நில மிசை நீடு வாழ்வார். - 3

மலர்தூவி வணக்கப்படுபவரைப் பணிந்தவர்  புகழுடன் வாழ்வர்

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல - 4

பற்றற்றவர்களைப் பின்தொடர்பவர்களுக்குத் துன்பங்கள் இல்லை

இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்

பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு- 5

பக்தர்களுக்கு அறியாமையின் இருவினைகளும் வராது.

பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க

நெறி நின்றார் நீடு வாழ்வார் - 6

புலனடக்கத்துடன் வாழ்பவரைப் பின்பற்றுவோர் நெடுநாள் வாழ்வர்

தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

மன கவலை மாற்றல் அரிது -7

மனக்கவலை நீங்க ஒப்பாரும் மிக்காருமில்லாதவரின் அடியைப் பற்று

அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

பிற ஆழி நீந்தல் அரிது - 8

சான்றோர் வழிவாழ்பவரின்றி பிறர் துன்பக் கடலை கடப்பது அரிது

கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான்

தாளை வணங்கா தலை- 9

ஈடில்லாத ஆற்றலுடையவரை வணங்கவே ஐம்புலன்களும் தலையும்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார். - 10

இறைவனை வணங்குவோரே மறுபிறவி அடையார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக