எழுத்துக்களின் தொடக்கம் அகரம். உலகின் தொடக்கம் ஆதிபகவன்
கற்றதனால்
ஆய பயன் என்-கொல் வால்_அறிவன்
நல் தாள் தொழாஅர் எனின் - 2
கல்வியின் பயன் அறிவுடையவரை வணங்குவதே
மலர்
மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நில மிசை நீடு வாழ்வார்.
- 3
மலர்தூவி வணக்கப்படுபவரைப் பணிந்தவர் புகழுடன் வாழ்வர்
வேண்டுதல்
வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல - 4
பற்றற்றவர்களைப் பின்தொடர்பவர்களுக்குத் துன்பங்கள் இல்லை
இருள்
சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு- 5
பக்தர்களுக்கு அறியாமையின் இருவினைகளும் வராது.
பொறி
வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார் - 6
புலனடக்கத்துடன் வாழ்பவரைப் பின்பற்றுவோர் நெடுநாள் வாழ்வர்
தனக்கு
உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மன கவலை மாற்றல் அரிது -7
மனக்கவலை நீங்க ஒப்பாரும் மிக்காருமில்லாதவரின் அடியைப் பற்று
அற ஆழி
அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிற ஆழி நீந்தல் அரிது - 8
சான்றோர் வழிவாழ்பவரின்றி பிறர் துன்பக் கடலை கடப்பது அரிது
கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான்
தாளை வணங்கா தலை- 9
ஈடில்லாத ஆற்றலுடையவரை வணங்கவே ஐம்புலன்களும் தலையும்
பிறவிப்
பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன்
அடிசேரா தார். - 10
இறைவனை வணங்குவோரே மறுபிறவி அடையார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக