வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 20. பயனில சொல்லாமை

 


பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும். - 191

பயனில்லாத சொற்களைக் கூறுபவனை யாவரும் இகழ்வா்

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில

நட்டார்கண் செய்தலிற் றீது.-192

தீய செயலைவிடவும் தீமையானது பயனில்லாத சொல்

நயனிலன் என்பது சொல்லும் பயனில

பாரித் துரைக்கும் உரை.- 193

பயனில்லாத பேச்சே ஒருவன் நயனில்லாதவன் என்றுரைக்கும்

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாரப்

பண்பில்சொல் பல்லா ரகத்து. - 194

பயனும், பண்புமில்லாத சொற்கள் நன்மையைக் கெடுக்கும்

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

நீர்மை யுடையார் சொலின்.-195

பயனில்லாத சொற்கள் ஒருவரின் மேன்மையை நீக்கும்

பயனில் சொல் பாராட்டு வானை மகன்எனல்

மக்கட் பதடி யெனல்.-196

பயனில்லாத சொற்களைப் பேசுவோர் மனிதருள் பதா் போன்றவா்

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று. - 197

நயமிலாத சொல் பேசினாலும், பயனிலாத சொல் பேசாதே

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்.- 198

அறிவுடையவா்கள் பயனில்லாத சொற்களைக் கூறார்    

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த

மாசறு காட்சி யவர். -199

மாசற்றவா்கள் பயனில்லாதவற்றைப் பேசமாட்டார்கள்   

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல். - 200

பயனுள்ள சொற்களைப் பேசி, பயனிலாச் சொற்களை தவிர்க்க


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக