வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 3. நீத்தார் பெருமை



ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு. - 21

ஒழுக்கமானவர் பற்றிய நூலே நல்ல நூல்

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. - 22

துறவிகளின் பெருமையை எண்ணிவிடமுடியாது

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு. - 23

இவ்வுலகம் துறவிகளையே போற்றும்

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. - 24

ஐம்புலன்களையும் அறிவால் அடக்கவேண்டும்

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி.- 25

ஐம்புலன்களை அடக்கியவர்களுக்கு இந்திரனே சான்று  

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.- 26

பண்பில் பெரியோரே செயற்கு அரிய செய்வர் 

சுவையொளி ஊறோசை நாற்றமென்று ஐந்தின்

வகைதெரி வான் கட்டே உலகு. - 27

ஐம்புலன்களை அடக்கியவரிடம், உலகம் அடங்கும்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும். - 28

துறவிகளின் பெருமையை அவர்களின் மொழியே காட்டிவிடும்

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயுங் காத்தல் அரிது.- 29

பக்குவப்பட்டவர்களின் கோபம் நெடுநேரம் நிற்காது

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான். - 30

அருள்தன்மை கொண்டவரே அந்தணர்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக