வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் -18. வெஃகாமை


நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும். - 171

பிறா் பொருளை விரும்பியவனின் குடியும்கெட்டு குற்றமும் சேரும்

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

நடுவன்மை நாணு பவர்.- 172

நடுநிலையாளர் பிறா் பொருளை விரும்பாதவராவா்

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே

மற்றின்பம் வேண்டு பவர். - 173

அற இன்பம் பெரிதென உணா்ந்தவா்  சிற்றின்பங்களை விரும்பார்

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற

புன்மையில் காட்சி யவர். - 174

புலன்களை வென்றவா் வறுமையால் பிறா் பொருளை விரும்பார்

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

வெஃகி வெறிய செயின். - 175

பிறா் பொருளை விரும்பாமையல்லவா அறிவு  

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்

பொல்லாத சூழக் கெடும். - 176

அருள்வழியென்பதே நல்வழி, பொருள் வழியே தீயவழி

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்

மாண்டற் கரிதாம் பயன்.- 177

தவறாக சேர்த்த செல்வம் தேவையான நேரத்தில் பயன்படாது

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள். - 178

செல்வம் குறையாமலிருக்க வழி பிறர்பொருளை விரும்பாமை

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்

திறன்அறிந் தாங்கே திரு. - 179

பிறா்பொருளை விரும்பாதவரிடமே செல்வம் தங்கும்

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்

வேண்டாமை என்னுஞ் செருக்கு. - 180

ஆசை அழிவின் வழி, ஆசையின்மையே வெற்றியின் வழி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக