வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 5 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 81. பழைமை

 


பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்

கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. - 801

நண்பர் உரிமையுடன் செய்வதை எந்நிலையிலும் ஏற்பதே பழைமை 

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு

உப்பாதல் சான்றோர் கடன்.- 802

உரிமைச் செயலே நட்புக்கு அழகு. அதை ஏற்பது சான்றோரின் கடன் 

பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை

செய்தாங்கு அமையாக் கடை. - 803

உரிமையுடன் செய்யாவிட்டால் நெடுநாள் நட்பில் பயனில்லை 

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்

கேளாது நட்டார் செயின். - 804

கேட்காமல் செய்யும் நண்பரின் செயலையும் விருப்புடன் ஏற்றுக்கொள்

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க

நோதக்க நட்டார் செயின். - 805

அறியாமையாலும், உரிமையாலும் நண்பர் எது செய்தாலும் வருந்தாதீர்

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்துத்

தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. - 806

நெடுநாள் நட்பை போற்றுவோர் அவர் செய்த தவறுக்காக  நீங்கார்     

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்

வழிவந்த கேண்மை யவர். - 807

அன்புடன் பழகியோர் பெருந்தீங்கு செய்தாலும் பொறுத்திருங்கள்

கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு

நாளிழுக்கம் நட்டார் செயின். - 808

தன் தவறை விட்டுக்கொடுக்காத நண்பர் தவறு செய்யும் நாள் நன்னாள்

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை

விடாஅர் விழையும் உலகு. - 809

நெடுநாள் நட்பை கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும். 

விழையார் விழையப் படுப பழையார்கண்

பண்பின் தலைப்பிரியா தார். - 810

பழைய நட்பை விடாதவர்களை பகைவரும் விரும்புவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக