வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 10 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 86. இகல்

 


இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்

பண்பின்மை பாரிக்கும் நோய். - 851

மனவேறுபாடு என்னும் பண்பு எவ்வுயிர்க்கும் வரும் நோய்         

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி

இன்னாசெய் யாமை தலை. - 852

மனவேறுபாட்டால் தீங்கு செய்தவனுக்கு நீயும் தீமை செய்யாதே   

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்

தாவில் விளக்கம் தரும். - 853

இகல் என்று மாறுபாட்டை நீக்குபவருக்கு நீங்காத புகழ் கிடைக்கும் 

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின். - 854

மாறுபாடு இல்லாதவர் இன்பத்துள் இன்பமாம் பேரின்பம் அடைவர்

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே

மிகலுக்கும் தன்மை யவர். - 855

மனமாறுபாட்டை ஆளத்தெரிந்தவரை யாரும் வெல்லமுடியாது  

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை

தவலும் கெடலும் நணித்து. - 856

முரண்பட்டு வாழ்வதை விரும்புவோர் வாழ்க்கை கெட்டு அழியும்   

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்

இன்னா அறிவி னவர். - 857

பகையுணர்வு கொள்ளும் பேதையர் உண்மையை அறியார்

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை

மிகலுக்கின் ஊக்குமாம் கேடு.- 858

மாறுபாடு கேடு, ஒருமைப்பாடே உயர்வு தரும்  

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை

மிகல்காணும் கேடு தரற்கு. - 859

உயர விரும்புபவன் மாறுபாட்டை விரும்பமாட்டான்

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்

நன்னயம் என்னும் செருக்கு. - 860

மாறுபாட்டால் தீமையும், நட்பினால் நன்மையும் வரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக