வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 9 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 85 புல்லறிவாண்மை

 


அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை

இன்மையா வையா துலகு.-841

அறிவின்மையே இன்மை எனப்படும். பிற இல்லாமைகள் பெரிதல்ல  

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும்

இல்லை பெறுவான் தவம். -842

அறிவில்லாதவன் ஈகை, பெறுபவனின் தவப்பயனே தவிர வேறில்லை

அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை

செறுவார்க்கும் செய்தல் அரிது.- 843

எதிரிகளுக்கும் செய்யமுடியாத துன்பத்தை பேதையர் தமக்கே செய்வர்

வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை

உடையம்யாம் என்னும் செருக்கு. -844

தாம் அறிவுடையவர் என எண்ணுதல் சிற்றறிவின் அடையாளம்

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற

வல்லதூஉம் ஐயம் தரும். - 845

கல்லாததைக் கற்றதாக பேசுபவர் கூறும் உண்மையும் நம்பமுடியாது  

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்

குற்றம் மறையா வழி. - 846

தம் குற்றத்தை நீக்காதவர், உடலை ஆடையால் மறைப்பது அறிவின்மை

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்

பெருமிறை தானே தனக்கு. - 847

அறிவுரைகளைக் கேட்காதவன் தமக்குத் தாமே தீங்கிழைப்பான்

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஒம் அளவுமோர் நோய். - 848

சொல்புத்தியும், தன்புத்தியும் இல்லா வாழ்க்கை, உயிர்வலி தரும் நோய் 

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தான்கண்ட வாறு. - 849

தான் அறிந்ததே சரி என எண்ணுபவரிடம் பேசுவதால் பயனில்லை    

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப் படும். - 850

உலகத்தார் உண்டு என்பதை, ஏற்காதவன் பேயாகவே கருதப்படுவான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக