வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 17 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 91. பெண்வழிச் சேரல்

 


மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்

வேண்டாப் பொருளும் அது. - 901

பெருமையும், பொருளும் மனைவியை விரும்பினால் மட்டும் வராது 

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்

நாணாக நாணுத் தரும். - 902

கடமையை எண்ணாமல் பெண்ணாசை கொள்பவன் இழிவடைவான்

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்

நல்லாருள் நாணுத் தரும். - 903

மனைவியைத் தாழ்பவன் நல்லார் முன் அவமானப்படுவான் 

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்

வினையாண்மை வீறெய்த லின்று.- 904

மனைவிக்கு அஞ்சுபவன் சிறந்த செயல்களைச் செய்யமுடியாது 

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்

நல்லார்க்கு நல்ல செயல். - 905

மனைவிக்கு அஞ்சுபவன் நற்செயல்கள் செய்வதற்கும் அஞ்சுவான்      

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்

அமையார்தோள் அஞ்சு பவர். - 906

தேவர்போல வாழ்ந்தாலும் மனைவிக்கு அஞ்சுபவருக்கு பெருமையில்லை

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்

பெண்ணே பெருமை உடைத்து. - 907

பெண்ணுக்கு அஞ்சும் ஆண்மையைவிட, நாணும் பெண்மையே சிறந்தது

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்

பெட்டாங்கு ஒழுகு பவர். - 908

நட்பும், உதவும் பண்பும் புகழும் பெண்ணிடம் பணிந்தவர்கில்லை      

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்

பெண்ஏவல் செய்வார்கண் இல். - 909

அறமும் பொருளுமின்றியே பெண்ணிடம் பணிபவன் வாழ்வான்       

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்

பெண்சேர்ந்தாம் பேதைமை இல். - 910

சிந்திக்கும் திறனுடையோர் மனைவின் சொல்லை மட்டும் கேளார்    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக