வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 24 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 97. மானம்

 


இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்

குன்ற வருப விடல். - 961

மானத்திற்கு இழுக்கானதை எந்நிலையிலும் செய்யற்க   

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு

பேராண்மை வேண்டு பவர். - 962

புகழுக்காக மானத்தை விடாதவரே, புகழுடன் வாழ்வர்

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டும் உயர்வு. - 963

உயர்வில் பணிவும், வறுமையில் உயர்வும் வேண்டும்   

தலையின் இழிந்த மயிரினையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை. - 964

தன் நிலையில் தாழ்ந்தவர், உதிர்ந்த தலைமுடிக்கு சமமானவர்

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின். -965

மலைபோன்றவரும் சிறுதவறினால் தன்னிலை குன்றிவிடுவர்

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று

இகழ்வார்பின் சென்று நிலை. - 966

இகழ்வாரின் பின்சென்றால் புகழும், நல்வாழ்வும் கிடைக்காகது

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே

கெட்டான் எனப்படுதல் நன்று. - 967

தன்னை மதியாதவரின் பின்சென்று வாழ்வதின் அழிவதே மேல்

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை

பீடழிய வந்த இடத்து. - 968

மானம் அழிந்தபின் உடலைப் போற்றி வாழாதே

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின். - 969

முடிஉதிர்ந்தால் மானும், மானம் இழந்தால் நல்லோரும் உயிர் நீ்ப்பர்

இளிவரின் வாழாத மானம் உடையார்

ஒளிதொழுது ஏத்தும் உலகு. - 970

அவமானத்தால் இறந்தாரை உலகம் வணங்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக