வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 21 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 95. மருந்து

 




மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று. - 941

வாதம், பித்தம், கபம் என்ற மூன்றே நோயின் தோற்றக் கூறு  

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின். - 942

செரித்தபின் உணவு உண்டால், உடலுக்கு மருந்தே தேவையில்லை 

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. - 943

நீண்டகாலம் வாழ, அளவுடன் உண்பதே மிகச்சிறந்த வழி

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து. - 944

செரித்தபின், காலத்துடன், ஏற்ற உணவை உண்ணவேண்டும்

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு. - 945

மாறுபாடில்லாத உணவை, அளவுடன் உண்டால் நோயில்லை

இழவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபேர் இரையான்கண் நோய். - 946

அளவுடன் உண்டால் நலம்! அதிகமாக உண்டால் நோய்!

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

நோயள வின்றிப் படும். - 947

பசியின் அளவறியாமல் அதிமாக உண்பவன் நோயாளியாவான்

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல். - 948

நோயின் தன்மை, அதன் காரணம், அதை நீக்கும் வழியறிந்து செய்  

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல்.- 949

நோயாளி, நோயளவு, காலம் கருதி மருத்துவம் செய்யவேண்டும் 

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

அப்பால் நாற் கூற்றே மருந்து. - 950

நோயாளி, மருத்துவர், மருந்து, துணைபுரிபவர் நான்கே மருத்துவம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக