வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 12 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 88. பகைத்திறம் தெரிதல்


 

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்

நகையேயும் வேண்டற்பாற்று அன்று. - 871

பகைமையை விளையாட்டாகக் கூட விரும்பாதே

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

சொல்லேர் உழவர் பகை.- 872

வில்வீரரைப் பகைத்தாலும் சொல்வீரரைப் பகைக்காதே

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்   

பல்லார் பகைகொள் பவன். -873

தனித்திருந்து பலர் பகையைத் தேடிக்கொள்வது பெரும் மூடத்தனம்

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்

தகைமைக் கண் தங்கிற்று உலகு.-874

பகைவரையும் நட்பாக்கிக் கொள்ளுபவனிடம் இவ்வுலகம் அடங்கும் 

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்

இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. - 875

துணையில்லா அரசன், தன் இரு எதிரிகளுள் ஒருவரை நண்பராக்குக

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்

தேறான் பகாஅன் விடல். - 876

துன்ப காலத்தில் யாரையும் நம்பாதே, பகைக்காதே

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க

மென்மை பகைவர் அகத்து. -877

அன்பிலாதாரிடம் துன்பத்தையும், எதிரியிடம் பலவீனத்தையும் கூறாதே

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்

பகைவர்கண் பட்ட செருக்கு.- 878

வலிமையாலும் தற்காப்பாலும் மட்டுமே பகைவரின் செருக்கு நீங்கும்

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து.- 879

முள்மரத்தை சிறிதாகவும், பகையை ஆரம்பத்திலும் நீக்கவேண்டும்  

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்

செம்மல் சிதைக்கலா தார்.- 880

எதிரிகளை குறைவாக எண்ணி அழிக்காமல் விடுபவர், அழிவு உறுதி  

 

 

89. உட்பகை

 

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்

இன்னாவாம் இன்றா செயின்.- 881

நிழலும், நீரும் சில நேரம் நோய்தருவதுபோல உறவுகளும் துன்பம்தரும்

வாள்போல பவைவரை அஞ்சற்க அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு. - 882

வாள்போன்ற வெளிப்பகையைவிட கேள்போன்ற உட்பகையை கொடியது

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து

மட்பகையின் மாணத் தெறும். - 883

உட்பகைக்கு அஞ்சி,காக்க, அது மட்கலத்தை அறுக்கும் கருவிபோன்றது

மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணா

ஏதம் பலவும் தரும். - 884

உட்பகையால் இருந்தால் குற்றங்கள் பல தோன்றும்

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்   

ஏதம் பலவும் தரும். - 885

உறவினர்களால் தோன்றும் உட்பகை உயிருக்கே ஆபத்தாகும்

ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும்

பொன்றாமை ஒன்றல் அரிது. - 886

ஒன்றியிருந்தவர்களிடம் உட்பகை வந்தால் எப்படியும் அழிவு தோன்றும்

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே

உட்பகை உற்ற குடி. - 887

செப்பின் மூடிபோல புறத்தே சேர்ந்து அகத்தே பிரிந்திருப்பதே உட்பகை

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது

உட்பகை உற்ற குடி. - 888

அரத்தால் தேயும் பொன்போல உட்பகையால் குடிச்சிறப்பு தேயும்

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்

உட்பகை உள்ளதாங் கேடு. - 889

எள்ளின் பிளவைப் போன்ற சிறு உட்பகையும் குடியைக் கெடுத்துவிடும்

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் 

பாம்போடு உடனுறைந் தற்று.- 890

உட்பகையுடன் வாழ்தல் ஒரு குடிசையிற் பாம்புடன் வாழ்வது போன்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக