வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 2 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 78. படைச் செருக்கு

 


என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை

முன்நின்று கல்நின் றவர். -771

நடுகற்களாக  நிற்கவிரும்பினால் எம் தலைவன் முன் நில்லுங்கள்   

கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது. - 772

முயலை எய்த அம்பைவிட, யானையைத் தவறவிட்ட வேல் சிறந்தது

பேராண்மை என்ப தறுகண்உன் றுற்றக்கால்

ஊராண்மை மற்றதன் எஃகு. - 773

பகைவரானாலும் அவரின் துன்பத்தில் உதவுவதே பேராண்மை

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும். - 774

தன் மேல் தைத்த வேல் கண்டு வருந்தாமல் மகிழ்பவனே வீரன்

விழித்தகண் வேல்கொண்டா டெறிய அழித்திமைப்பின்

ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. - 775

வேல் எறிந்தாலும் கண் இமைக்காமல் சினந்து நோக்குவதே வீரம்

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்

வைக்கும்தன் நாளை எடுத்து.- 776

போரில் விழுப்புண்பெறாத நாட்களை வீணாகக் கருதுபவனே வீரன்  

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்

சுழல்யாப்புக் காரிகை நீர்த்து. - 777

உயிரைவிட புகழே பெரிது என, கழலைக் காலில் அணிபவனே வீரன் 

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்

செறினும் சீர் குன்றல் இலர். - 778

அரசன் தடுத்தாலும் வீரத்தில் தளராதவரே சிறந்த வீரர்  

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே

பிழைத்தது ஒறுக்கிற் பவர். - 779

சத்தியம் செய்தபடி துணிந்து போராடும் வீரரை கண்டிப்பார் யார்?  

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு

இரந்துகோள் தக்கது உடைத்து.                   780

அரசனே கண்ணீர் வீடும் அளவு பெறும் மரணமே வீரமரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக