வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 23. ஈகை

 


 வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து. - 221

வறியவருக்கு வழங்குவதே ஈகை

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று. - 222

பெறுதல் தீது. ஈதல் நன்று

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலனுடையான் கண்ணே யுள.-223

ஒருவன் நிலையறிந்து அவன் கேட்கும் முன்பே கொடு   

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்

இன்முகங் காணும் அளவு. -224

இல்லாமையில் வாடியவர் இன்முகம் காணக் கொடுப்பதே ஈதல்

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின். -225

கொடுக்கும் பண்புடையவா் துறவிகளைவிட மேலானவா்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.- 226

பசித்தவருக்கு உணவளிப்பது ஒருவரின் மிகச்சிறந்த சேமிப்பு

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்

தீப்பிணி தீண்டல் அரிது.-227

வள்ளல் பசியால் என்றும் வாடும் நிலை வராது

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்க ணவர்.-228

கொடுத்தலின் இன்பம் அறியாதவரே சேமித்துவைத்து இழப்பா்

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

தாமே தமியர் உணல்.-229

தனித்து உண்பது பிச்சையெடுத்தலைவிட இழிவானது    

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்

ஈதல் இயையாக் கடை.-230

ஈகைப் பண்பில்லாத நிலை சாவினும் கொடியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக