வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 26 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம்- 19. புறங்கூறாமை

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறங்கூறான் என்றல் இனிது.- 181

ஒருவன் தீமை செய்தாலும், புறங்கூறாமை சிறந்தது 

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே

புறனழீஇப் பொய்த்து நகை. - 182

பொய்யான முகமலர்ச்சி, தீமைகளுள் தீமையானது

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

அறங்கூறும் ஆக்கத் தரும். - 183

புறங்கூறி பொய்யாக வாழ்வதைவிட சாதலே நன்று

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க

முன்னின்று பின்நோக்காச் சொல் - 184

நேரில் கடுஞ்சொல் கூறினும், மறைவில் புறஞ்சொல் கூறாதே

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்

புன்மையாற் காணப் படும். - 185

புறங்கூறுவான் சொல் அவன் தீயவன் என்பதைக் காட்டும்

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்

திறன்தெரிந்து கூறப் படும்.- 186

நீ ஒருவரைப் புறம்பேசினால் உன்னை ஒருவர் புறம்பேசுவார்

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாடல் தேற்றா தவர்.- 187

நட்பின் அறியாதவா்கள் புறங்கூறி நட்பைப் பிரித்துவிடுவா்

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்

என்னைகொல் ஏதிலார் மாட்கு. - 188

நண்பனையே தூற்றுபவன் எதிரியை தூற்றாமல் விடுவானா  

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்

புன்சொல் உரைப்பான் பொறை.- 189

புறம்கூறுவோனையும் அறம் கருதியே நிலம் தாங்குகிறது

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்   

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. -190

பிறா்குற்றத்தைக் காண்பதுபோல் உன் குற்றத்தைக் காண்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக