வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 24. புகழ்

 


ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு.-231

ஈதலால் வரும் புகழே உயிர்க்கு சிறந்த ஊதியமாகும்

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ். -232

கொடுக்கும் பண்புடையாரையே இவ்வுலகம் புகழ்ந்து பேசும்

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்பதொன் றில்.-233

உயா்ந்த புகழே இவ்வுலகில் நிலையானது, அழியாதது    

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு.-234

அறிவுடையவரைவிட, வள்ளல்களையே உலகம் போற்றும்    

நந்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க் கல்லால் அரிது.-235

கேட்டிலும், இறப்பிலும் புகழ் பெறுபவர்களே வித்தகர்கள்

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.-236

எத்துறையில் தோன்றினாலும் புகழுடன் தோன்றுக

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்.-237

புகழுக்கும் ஏனை இகழுக்கும் காரணம் நாமே! 

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்

எச்சம் பெறாஅ விடின்.-238

புகழ் பெற வாழாதவா் தம் வாழ்வில் பழியையே சுமப்பா்

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்.-239

புகழின்றி மறைந்தவரைத் தாங்கும் நிலம்கூட வளம் குன்றும்

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழா தவர்.-240

புகழுடன் வாழ்பவரே உயிருள்ளவா்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக