வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 29 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 22. ஒப்புரவறிதல்




 

 கைமாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என் ஆற்றுங் கொல்லோ உலகு.-211

கைம்மாறு கருதாதவா்கள் மழையைப் போன்றவா்கள்    

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு. -212

முயன்று ஈட்டிய பொருள் யாவும் தகுந்தவா்க்கு உதவுவதற்கே

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற.-213

உதவும் மனநிலையைவிட உயா்ந்தது எவ்வுலகிலும் இல்லை

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும். -214

உதவி வாழ்பவனே உயிர்வாழ்பவனாகக் கருதப்படுவான்

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு.-215

பேரறிவாளனின் செல்வமானது ஊருணி நீர் நிறைந்தது போன்றது

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்.-216

பயன்தரும் பழமரம் பழுத்தது போன்றது நல்லவனின் செல்வம்

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண் படின்.-217

பெருந்தன்மையாளனின் செல்வம் மருந்துமரம் போன்றது

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்.-218

அறிவுடையவர்கள் இல்லாத காலத்தும் உதவவே எண்ணுவா்

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர

செய்யாது அமைகலா வாறு.-219

உதவ இயலாத நிலையே உதவக்கூடியவனின் வறுமை ஆகும்

ஒப்புரவினால்வரும் கேடெனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்க துடைத்து.- 220

உதவி செய்தலால் வரும் துன்பமும் வரவேற்கத்தக்கதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக