வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 21. தீவினையச்சம்


தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவார்

தீவினை என்னும் செருக்கு. -201

தீவினைகளை செய்ய ஒழுக்கமுடையோர் அஞ்சுவா்

தீயவை தீய பயத்தலான் தீயவை

தீயினும் அஞ்சப் படும். -202

தீமை விளைவிப்பதால் தீயைவிடக் கொடியது தீவினை

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல். -203

தீங்கிழைத்தவருக்கும் தீமை செய்யாமையே சிறந்த அறிவு

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. -204

மறந்தும் பிறருக்குத் தீமைசெய்யாதே, அறம் உன்னை வருத்தும்

இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்

இலனாகும் மற்றும் பெயர்த்து. -205

வறுமைக்கு அஞ்சி தீமை செய்தால் மீண்டும் வறுமையடைவாய்

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான். -206

தீவினைகள் வராமலிருக்க தீமை செய்யாமலிக்கவேண்டும்

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை

வீயாது பின்சென்று அடும்.-207

எதிரியிடமிருந்தும் தப்பலாம், நாம் செய்த தீவினைகள் விடாது

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடியுறைந் தற்று.-208

தீவினை செய்வாருடன், தீமை நிழல்போலத் தொடரும்   

தன்னைத்தான் காதலனாயின் எனைத்தொன்றும்

துன்னற்க தீவினைப் பால்.-209

உன்னை விரும்பி நீ வாழவிரும்பினால் தீமை செய்யாதே

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்

தீவினை செய்யான் எனின். -210

தீவினை செய்யாதவனே கேடில்லாதவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக