வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 25. அருளுடைமை




அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள.-241

பொருள் பெறுவது எளிது, அருள் பெறுவது அரிது

நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்

தேரினும் அஃதே துணை. - 242

ஆராய்ந்து நோக்கினாலும் அருளே வாழ்க்கைக்குத் துணை

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்.- 243

அருளுடையார் வாழ்வே சொர்க்கமாகும்

மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப

தன்னுயர் அஞ்சும் வினை.- 244

எவ்வுயிரையும் போற்றும் அருளுடையா் தம் உயிர்க்கு அஞ்சார்

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்

மல்லல்மா ஞாலங் கரி.- 245

அருளுடையவருக்கு இவ்வுலகில் துன்பங்கள் வராது

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி

அல்லவை செய்தொழுகு வார். - 246

வாழ்க்கையின் பொருளை மறந்தவரே அருளற்றவராவார்

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு. -247

இல்லறத்துக்கு பொருளும், துறவறத்துக்கு அருளும் தேவை

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்

அற்றார்மற் றாதல் அரிது.-248

இழந்தால் பெற இயலாதது அருள் மட்டுமே

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம்.-249

அருளற்றவன் அறம் செய்வது பேதையின் நூலறிவு போன்றது

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேல் செல்லும் இடத்து.-250

எளியாரைத் துன்புறுத்தும்போது வலியவரை நினைக்கவேண்டும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக