வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 28. கூடா ஒழுக்கம்


வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.- 271

வஞ்சகரை அவர் உடலில் கலந்த ஐம்பூதங்களும் தம்முள் நகும்

வான்உயர் தோற்றம் எவன் செய்யும் தன்நெஞ்சம்

தான்அறி குற்றப் படின்.- 272

மனமறிந்தும் தவறு செய்பவா், துறவுக்கோலத்தால் பயன் என்ன

வலிஇல் நிலைமையான் வல்உருவம் பெற்றம்

புலியின் தோல் போர்த்துமேய்ந் தற்று.- 273

பொய்தவக்கோலம் புலித்தோலை பசு போர்த்தியது போன்றது

தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.- 274

போலித்துறவிகள் வேடர்களுக்கு ஒப்பானவர்கள்

பற்றுஅற்றேம் என்பார் படிற்றுஒழுக்கம் எற்றுஎற்றுஎன்று

ஏதம் பலவும் தரும்.- 275

துறவிபோல நடிப்பவர்கள் முடிவில் பெருந்துன்பமடைவார்கள்

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணார் இல்.-276

போலித்துறவிகளைப் போல கொடியவர்கள் யாருமில்லை

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி

மூக்கிற் கரியார் உடைத்து.-277

வெளியே நல்லவராகவும்,மனதில் தீயவராகவும் வாழ்வோர் பலர்

மனத்தது மாசுஆக மாண்டார்நீர் ஆடி

மறைந்துஒழுகு மாந்தர் பலர்.- 278

மனதில் மாசுடன், புறத்தே மெய்யான துறவிகளாக நடிப்பார் பலர்

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன

வினைபடு பாலால் கொளல்.-279

தோற்றத்தைவிட, செயலால் ஒருவரை இனம்காண்பதே சிறந்தது

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின். -280

தோற்றத்தைவிட பற்றற்று வாழ்வதே உயர்ந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக