வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 14 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 36. மெய்யுணர்தல்


 

பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்

மருளான்ஆம் மாணாப் பிறப்பு. - 351

பொய்யானவற்றை மெய்யென்று உணர்வதே துன்பம் தரும் பிறப்பு

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசுஅறு காட்சி யவர்க்கு.- 352

மெய்யுணர்வாளர்களே அறியாமை இருள் நீங்கி இன்பம் பெறுவர் 

ஐயத்தின் நீங்கித் தௌந்தார்க்கு வையத்தின்

வானம் நணியது உடைத்து. - 353

மெய்யுணர்வு பெற்றுவிட்டால் வீடுபேறு அடைவது எளிது

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே

மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. - 354

புலனடக்கம் பெற்றாலும் மெய்யுணர்வு பெறாவிட்டால் பயனில்லை

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.- 355

எப்பொருளையும் தோற்றத்தை மட்டும் காணாமல் உண்மைக் காண்

கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றுஈண்டு வாரா நெறி. - 356

மெய்ப்பொருள் உணர்ந்தவரே மீண்டும் பிறவா வழியை அறிவா்

ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு.- 357

மெய்ப்பொருளை உணர்ந்தவர்களுக்கு மறுபிறப்பு தேவையில்லை

பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்

செம்பொருள் காண்பது அறிவு. - 358

பிறப்பின் உண்மை நிலையை அறிவதே மெய்யறிவு 

சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்

சார்தரா சார்தரு நோய்.- 359

பற்றுகளைக் கடந்து உண்மையை உணர்ந்தார்க்கு துன்பமில்லை

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

நாமம் கெடக்கெடும் நோய். - 360

காமம், வெகுளி, மயக்கம் மூன்றையும் கடந்தவர்க்கு துன்பமில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக