வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 30. வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.- 291

நற்சொற்களே வாய்மை எனப்படும்              

பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின். - 292

நன்மைக்காகப் பேசும் பொய்களும் வாய்மை எனக் கருதப்படும்

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்.- 293

மனமறிந்து பொய்கூறின் மனமே அவனைத் துன்புறுத்தும்

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள்ளெல்லாம் உளன். - 294

உள்ளமறிய பொய் கூறாதவன், உலகத்தார் உள்ளத்தில் வாழ்வான்

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானஞ்செய் வாரின் தலை.-295

தானம், தவத்தைவிட வாய்மை உயர்ந்தது

பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை

எல்லா அறமும் தரும்.- 296

உண்மையே புகழையும். அறத்தையும் கொடுக்கும்

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று.- 297

உண்மை பேசுவது அறம் செய்வதைவிட உயர்ந்தது

புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை

வாய்மையான் காணப் படும்.-298

உண்மையால் அகமும், நீரால் புறமும் தூய்மையாகும்

எல்லா விளக்கும் விளக்குஅல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.-299

சான்றோர்க்கு உண்மையே மெய்யான விளக்கு 

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும்

வாய்மையின் நல்ல பிற.-300

நான் கண்டவற்றுள் உண்மையைவிட உயர் அறம் வேறில்லை


1 கருத்து: