வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 30 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 49. காலம் அறிதல்

 


பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.- 481

ஆந்தை, காக்கையின் வலிமையைக் காலமே முடிவுசெய்கிறது

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்குங் கயிறு.- 482

காலமறிந்து வாழ்தலே செல்வத்தைக் காக்கும் கயிறு

அருவினை யென்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்.- 483

காலமறிந்து செய்தால் அரிய செயலென ஏதும் இல்லை

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்

கருதி இடத்தாற் செயின். - 484

காலம், இடமறிந்து செயல்பட்டால் உலகையே வெல்லலாம்

காலம் கருதி இருப்பவர் கலங்காது

ஞாலம் கருது பவர்.- 485

உலகை வசப்படுத்துபவர்கள் காலத்தைக் கண்டு கலங்கமாட்டார்கள்

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து.- 486

ஊக்கமுடையார் அடக்கம் ஆட்டுக்கடாயின் பின்வாங்கல் போன்றது 

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.- 487

கோபத்தைத் தக்க நேரத்தில் வெளிப்படுத்துபவரே அறிவுடையோர்

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை

காணின் கிழக்காம் தலை.- 488

எதிரிக்கு அழிவு வரும்வரை உன் கோபத்தை அடக்கி வை

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற் கரிய செயல்.- 489

அரிய செயலை உரிய காலத்தில் செய்

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து.- 490

நற்காலம் வரும்வரை கொக்கைப்போலக் காத்திரு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக