வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

அழகின் சிரிப்பு - குன்றம் - பாரதிதாசன்

 



மாலை வானும் குன்றமும்

தங்கத்தை உருக்கி விட்ட 

வானோடை தன்னிலே ஓர்

செந்தில் மாணிக்கத்துச்

செழும்பழம் முழுகும் மாலை

செங்குத்தாய் உயர்ந்த குன்றின்

மரகதத் திருமேனிக்கு

மங்காத பவழம் போர்த்து

வைத்தது வையம் காண


 ஒளியும் குன்றும்


அருவிகள் வயிரத் தொங்கல்

அடர்செடி பச்சை பட்டே

குருவிகள் தங்கக் கட்டி

குளிர் மலர் மணியின் குப்பை

எருதின் மேல் பாயும் வேங்கை

நிலவு மேல் எழுந்த மின்னல்

சருகெலாம் ஒளி சேர் தங்கத்

தகடுகள் பாரடா நீ


 கிளி எறிதல்

தலைக்கொன்றாய் கதிரைக் கொத்தித்

தழைப்பகஞ் சிறகடித்து

மலைப்புன்னை மரத்தின் பக்கம் 

வந்திடும் கிளி கூட்டத்தில்

சிலைப் பெண்ணாள் கவண் எறிந்து

வீழ்த்தினேன் சிறகை என்றாள்

குலுக்கென்று சிரித்தொருத்தி 

கொழும்புன்னை இலைகள் என்றாள்


 குறவன் மயக்கம்

பதட்டமாய் கிளிஎன் றெண்ணி 

ஆதொண்டைப் பழம்பார்த் தானை

உதட்டினை பிதுக்கிக் கோவை

உன்குறிப் பிழைஎன் றோதும்

குதித்தடி மான் மான் என்று

குறுந்தடி தூக்கு வானை

கொதிக்காதே நான் அம்மானே

என ஓர் பெண் கூறி நிற்பாள்

 குன்றச் சாரல் பிற

குன்றத்தின் சாரல் குன்றின்

அருவிகள் குதிக்கும் பொய்கை

பன்றிகள் மணற்கிழங்கு

பறித்திடும் ஊக்கம் நல்ல 

குன்றியின் மணியால் வெண்மைக்

கொம்பினால் அணிகள் பூண்டு

நின்றிடும் குறத்தியர்கள் 

நிலா முகம் பாரடா நீ

 குறத்தியர்

 

நிறைதினைக்கதிர் முதிர்ந்து

நெடுந்தாளும் பழுத்த கொல்லைப்

புறத்தினில் தேர் போல் நீண்ட

புதுப்படம் அமைத்து மேலே

குறத்தியர் கவண் எடுத்து

குறிபார்க்கும் விழி நீலப்பூ

எறியும் கை செங்காந் தட்பூ

உடுக்கை தான்  எழில் இடுப்பே


 மங்கிய வானில் குன்றின் காட்சி


மறைக்கின்ற பரிதி குன்ற 

மங்கையோ ஒளியிழந்து

நிறை மூங்கில் இளங்கை நீட்டி 

வாராயோ என அழைப்பாள்

சிறு புட்கள் அலரும்  யானை 

இருப்பிடம் சேரும்  அங்கோர்

குறுநரி ஊளைச் சங்கால் 

இருள் இருள் என்று கூவும்


 நிலவும் குன்றும்


இருந்த ஒரு கருந்தி ரைக்குள் 

இட்ட குவியல் போல

கருந்தமிழ் சொல்லுக் குள்ளே 

கருத்துக்கள் இருத்தல் போல

இருள்மூடிற் றுக் குன் றத்தை

நாழிகை இரண்டு செல்லத்

திரும்பிற்று நிலவு குன்றம்

திகழ்ந்தது முத்துப் போலே


எழில் பெற்ற குன்றம்

நீலக் முக்காட்டுக்காரி 

நிலா பெண்ணாள்  வற்றக் காய்ந்த 

பாலிலே உறைமோர் ஊற்றிப்

பருமத்தால் கடைந்து பானை

மேலுற்ற வெண்ணெய் அள்ளிக் 

குன்றின்மேல் வீசி விட்டாள்

எலுமட்டுந்தோழா நீ 

எடுத்துண்பாய்  எழிலை எல்லாம்


முகில் மொய்த்த குன்றம்

ஆனைகள் முதலைக் கூட்டம் 

ஆயிரம் கருங்கு ரங்கு 

வானிலே காட்டி வந்த 

வண முகில் ஒன்று கூடிப்

பானையில் ஊற்றுகின்ற  

பதநீர் போல்குன்றில் மொய்க்க

போனது அடிமை நெஞ்சம்

நெஞ்சம் புகைதல் போல் தோன்றும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக