வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 44. குற்றம் கடிதல்


 

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து. - 431

செருக்கு, கோபம், இழிசெயல் இல்லாமையே சிறப்பு

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா

உவகையும் ஏதம் இறைக்கு. - 432

பேராசை, அவமானம், மிகுதியான மகிழ்ச்சி அரசர்க்குக் கேடு

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்

கொள்வார் பழிநாணு வார்.                       433

திணையளவு குற்றத்துக்கு பனையளவு நாணுவா் சான்றோர்

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

அற்றந் தரூஉம் பகை.- 434

குற்றம் அழிவுதரும், அதனால் குற்றமின்றி வாழ்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும். - 435

வருமுன் காக்காதவன் வாழ்க்கை,தீயின் முன் வைக்கோல் போல்

தன்குற்றம் நீக்கப் பிறர்குற்றங் காண்கிற்பின்

என்குற்ற மாகும் இறைக்கு.-  436

தன்குற்றம் நீக்கி, பிறர் குற்றத்தைக் காண்பது தலைவனின் கடன்

செயற்பால செய்யா திவறியான் செல்வம்

உயற்பால தன்றிக் கெடும்.- 437

நற்செயலுக்கு உதவாத கஞ்சனின்  செல்வம்  வீணே அழியும்

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்

எண்ணப் படுவதொன் றன்று. - 438

கஞ்சத்தனமானது குற்றங்களுள் தனிப்பெருங்குற்றம்

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை.- 439

தற்பெருமை கொள்ளாதே, தீய செயல்களைச் செய்யாதே

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல். - 440

தன் விருப்பத்தை எதிரி அறியாதபடி காப்பவனை வெல்லமுடியாது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக