வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 48- வலி அறிதல்

 


வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல். - 471

செயல், பகை, துணை, தன் வலிமையறிந்து எச்செயலும் செய்க

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்

செல்வார்க்குச் செல்லாதது இல்.- 472

தன்வலிமையறிந்து செய்வோரால் முடியாத செயல் ஏதுமில்லை

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர்.-473

தன் வலிமையை முழுதும் அறியாமல் கெட்டவா் பலர்

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும்.- 474

ஒற்றுமையின்றி, தன்வலியறியாது, பெருமைகொள்வோர் அழிவா்

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

சால மிகுத்துப் பெயின்.- 475

மயிலிறகானாலும் அளவு மிகுந்தால் வண்டியின் அச்சு முறியும்

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்

உயிர்க்கிறுதி ஆகி விடும்.- 476

எல்லையைக் கடந்தால் எதிலும் தொல்லைதான்

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்

போற்றி வழங்கு நெறி.- 477

வருவாயறிந்து கொடைசெய்க, அதுதான் பொருளைக் காக்கும் வழி

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை

போகாறு அகலாக் கடை. - 478

செலவு குறைவானால், வரவு குறைவாயினும் குறையில்லை

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்.- 479

அளவறியாதான் வாழ்கை வளர்வதுபோல தேய்ந்து அழியும்

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை

வளவரை வல்லைக் கெடும். - 480

பொருளின் அளவறியாமல் செய்யும் உதவியால் செல்வம் அழியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக