வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 46. சிற்றினம் சேராமை


 

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்

சுற்றமாச் சூழ்ந்து விடும். - 451

சிறியோரிடம் நட்பு சிறுமை, சிறியோரை நீங்குதல் பெருமை

நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப தாகும் அறிவு.- 452

நிலத்தால் நீரும், சேரும் நட்பால்  அறிவும் மதிப்புப் பெறும்

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்

இன்னான் எனப்படுஞ் செயல்.- 453

உணா்ச்சி மனதளவிலும், மதிப்பு நல்ல சுற்றதாலும் தோன்றும்

மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு

இனத்துளது ஆகும் அறிவு.- 454

அறிவு மனம் சார்ந்ததல்ல, சேரும் கூட்டம் சார்ந்தது

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்

இனந்தூய்மை தூவா வரும்.- 455

மனத்தூய்மை, செயல்தூய்மை இரண்டும் இனத்தால் அமையும் 

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு

இல்லைநன் றாகா வினை.- 456

மனத்தூய்மையைவிட இனத்தூய்மை உயர்ந்தது

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும்.- 457

மனம் ஆக்கத்தையும், இனம் நற்புகழையும் வழங்கும்

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு

இனநலம் ஏமாப் புடைத்து.- 458

நல்ல சான்றோர்க்கும், இனநலமே காவலாகும்

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்

இனநலத்தின் ஏமாப் புடைத்து.- 459

நல்மனதால் கிடைக்கும் மறுமையிலும் இனமே துணையாகும்

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்

அல்லற் படுப்பதூஉம் இல்.- 460

நல்ல சுற்றமே சிறந்த துணை, தீய சுற்றமே பெருந்துன்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக