வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 12 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 34. நிலையாமை


நில்லா வற்றை நிலையின என்றுஉணரும்

புல்லறிவு ஆண்மை கடை.- 331

நிலையில்லாதவற்றை நிலையென உணர்வது அறியாமையே

கூத்தாட்டு அவைக்குழாத் தறே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று.- 332

கூட்டமும், செல்வமும் கூடுவது போலவே மறையும்

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்

அற்குப ஆங்கே செயல். - 333

நிலையில்லாத செல்வத்தால் நிலையான அறம் செய்    

நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்

வாள் அது உணர்வார்ப் பெறின்.- 334

நாள் எனத் தோன்றும் காலம், வாழ்நாளைக் குறைக்கும் வாள்

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப் படும்.- 335

நிலையாமையை உணர்ந்து நற் செயல்களைச் செய்க

நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு.- 336

நேற்றிருந்தவர் இன்றில்லை என்ற நிலையாமையே பெருமை

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப

கோடியும் அல்ல பல.- 337

நிலையாமையை அறியாதவா்களே மனக்கோட்டை கட்டுவார்கள்

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே

உடம்போடு உயிரிடை நட்பு.- 338

கூடுக்கும் பறவைக்குமான தொடர்பே, உடலுக்கும் உயிருக்கும்

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.- 339

உறங்குவதும், விழிப்பதும் போன்றது இறப்பதும், பிறப்பதும்

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு.- 340

உயிரானது எந்த உடலிலும் நிலையாகத் தங்காது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக