வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 26 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 45. பெரியாரைத் துணைக் கோடல்

 


அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல். - 441

அறனறிந்த மூத்த அறிவுடையாருடன் ஆராய்ந்து நட்பு கொள்க

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல். - 442

வந்த துன்பம் நீக்கி, துன்பம் வராமல் காப்பவரிடம் நட்பு பாராட்டு

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல். - 443

அரிதினும் அரிதே, பெரியோரிடம் கொள்ளும் நட்பு

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையு ளெல்லாந் தலை. - 444

பெரியவர்களை சுற்றத்தாராக்குவது வல்லமையும் தலைசிறந்தது

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்

சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். - 445

ஆராய்ந்து கூறும் அறிஞரை அரசனும் தேர்ந்து கொள்வான்

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்

செற்றார் செயக்கிடந்த தில்.- 446

பெரியவர்களின் துணையிருந்தால் எதிரிகளும் அஞ்சுவா்

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே

கெடுக்குந் தகைமை யவர்? - 447

தவறுகளைக் கடிந்து கூறும் பெரியோரால் பகை அழியும்

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும். - 448

கடிந்து கூற மூத்தோர் இல்லாத அரசன் தானே கெடுவான்

முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்

சார்பிலார்க் கில்லை நிலை.- 449

வணிகத்துக்கு முதலீடும், நிலைபேறுக்கு பெரியோரும் தேவை

பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல். - 450

பலரிடம் பகைகொள்வதைவிட, நல்லோர் நட்பை விடுதல் தீது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக