வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 28 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 47. தெரிந்து செயல்வகை

 


அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல்.- 461

ஆக்கத்தையும், அழிவையும் ஆராய்ந்து செயல்பட தெரிந்த 

இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்.- 462

தேர்ந்த நட்புடன், ஆராய்ந்து ஆற்றும் செயல் நன்றாகவே முடியும்

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார். - 463

கிடைப்பதை எண்ணி இருப்பதை விடாதவரே அறிவுடையவர்

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்

ஏதப்பாடு அஞ்சு பவர்.- 464

தெளிந்து செய்யும் செயல் என்றும் இழிவு தராது

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்

பாத்திப் படுப்பதோ ராறு.- 465

திட்டமிடாமல் செய்யும் செயல் எதிரிகளுக்கே நன்மை தரும்

செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும்.- 466

நற்செயல் செய்யாவிட்டாலும், தீச்செயல் செய்தாலும் கேடுவரும்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.- 467

சிந்தித்து செயல்படு, செயல்பட்ட பிறகு சிந்திப்பது இகழ்ச்சி

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று

போற்றினும் பொத்துப் படும்.- 468

நன்கு அறியாத செயலை பலர் கூடிநின்றாலும் முடிக்க முடியாது

நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர்

பண்பறிந் தாற்றாக் கடை.- 469

பண்பறியாது செய்யும் நன்மையும் தீமையில் முடியும்

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு

கொள்ளாத கொள்ளாது உலகு. - 470

இகழ்ச்சியான, பழியான செயலைச் செய்யாதே  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக