வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 3 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 27. தவம்

 


உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை

அற்றே தவத்திற்கு உரு.- 261

பொறுமையும், துன்பம் செய்யாதிருத்தலுமே தவம்

தவமும் தவம்உடையார்க்கு ஆகும் அவம் அதனை

அஃதுஇலார் மேற்கொள் வது. - 262

போலியான துறவிகளால் உண்மையான துறவிகளுக்கு இழுக்கு

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

மற்றை யவர்கள் தவம். - 263

துறவிகளுக்கு உதவவே இல்லறத்தால் துறவை மறந்தனா்

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும். - 264

தீயவரை அழித்தலும், நண்பரை உயர்த்துதலும் தவத்தால் ஆகும்

வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப் படும். - 265

விரும்பியது கிடைப்பதால் பலரும் தவம் செய்ய முயல்வர்

தவம்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார்

அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. - 266

பிறர் ஆசையால் தவறுசெய்ய, துறவிகள் கடமையையே செய்வா்

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. - 267

தங்கம்போல, துன்பத்திலும் மெய்யறிவு பெறுவர்கள் துறவிகள்

தன்உயிர்தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயிர் எல்லாம் தொழும். - 268

பற்றற்று வாழ்பவர்களை உயிர்கள் எல்லாம் வணங்கும்

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றம் தலைப் பட்ட வர்க்கு.269

தவத்தால் மரணத்தையும் வெல்லலாம்         

இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர்.  - 270

இல்லாதவர்கள் பலர் வாழக்காரணம் தவம் செய்பவர்கள் சிலரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக