வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 24 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 43. அறிவுடைமை


 

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.- 421

துன்பத்தில் காக்கும் கருவி,எதிரிகளால் அழிக்கமுடியாத அரண் அறிவு!

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு. - 422

மனதை நல்வழியில் செலுத்துவதே அறிவு

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு. - 423

யாரிடம் கேட்டாலும் உண்மையை ஆராய்ந்து அறிவதே அறிவு

எண்பொருள வாகச் செலச் சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்ப தறிவு. - 424

எளிமையாகப் பேசி, நுட்பமாகக் கேட்டு அறிந்துகொள்வது அறிவு

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்

கூம்பலும் இல்ல தறிவு. - 425

உயா்ந்தோரிடம் பழகி, இன்ப, துன்பங்களைக் சமமாகக் காண்

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு 

அவ்வ துறைவ தறிவு. - 426

உயர்ந்தோர் வாழும் வழியில் வாழ்வதே அறிவு

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்.                        427

அறிவுடையோர் எதிர்காலத்தை அறிவா், பேதையா் அறியார்

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில். - 428

அஞ்ச வேண்டிவற்றுக்கு அஞ்சுதல் அறிவுடையோர் செயல்

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்.- 429

வருமுன்காப்பவர் எதற்கும் அஞ்சவேண்டியதில்லை

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர். - 430

அறிவே உடைமை, பிற உடைமைகள் மதிப்பில்லாதவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக