வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 40. கல்வி


 கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.- 391

கல், கசடறக் கல், கற்பவை கல், கற்றபின் நில், சூழல்களுக்குத் தக

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.- 392

எண்ணும்,எழுத்துமே வாழும் உயிர்களுக்குக் கண்கள் போன்றவை

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர். - 393

கற்றோர் பெற்றதே கண்கள்,கல்லாதார் பெற்றதோ இரு புண்கள்

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில். -394

மகிழும்படி கூடி, மனம் கலங்கப் பிரிதலே அறிவுடையோர் தொழில்

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர். - 395

செல்வர் முன் வறியவர்போல பணிந்து கற்பதே சிறந்த கல்வி   

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு. - 396

மணற்கேணியில் நீர்போல, கற்க கற்க அறிவு வளரும்

யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு. - 397

கற்றவருக்கு எந்த நாட்டிலும், எந்த ஊரிலும் சிறப்பு

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து. -398

இப்பிறவியில் கற்பது ஏழு பிறவிக்கும் உதவும்   

தாமின் புறுவது உலகின் புறக் கண்டு

காமுறுவர் கற்றறிந் தார். -399

கற்றவர், கற்பிப்பவர் இருவருக்கும் இன்பம் கல்வியே

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை - 400

கல்வியே அழிவில்லாத செல்வம், பிற எல்லாம் செல்வமல்ல

 

1 கருத்து: