வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 7 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 29. கள்ளாமை

 


எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்

கள்ளாமை காக்கதன் நெஞ்சு. - 281

இகழ்ச்சியை விரும்பாதவன் திருடும் எண்ணத்தை விடவேண்டும்

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்.- 282

மனதால் பிறர்பொருளைத் திருட நினைப்பதும் குற்றமே

களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து

ஆவது போலக் கெடும்.- 283

திருடிய செல்வம், பெருகுவதுபோல அழிந்துபோகும்

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்

வீயா விழுமம் தரும்.   284

களவாடிய பொருள் தக்க நேரத்தில் பயன்படாது

அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.-285

பொருளால் பெற்ற நட்பைவிட, மனதால் பெற்ற நட்பே சிறந்தது

அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண்

கன்றிய காத லவர். - 286

களவுசெய்து வாழ்பவர்கள் அளவறிந்து வாழமாட்டார்கள்

களவுஎன்னும் கார்அறிவு ஆண்மை அளவுஎன்னும்

ஆற்றல் புரிந்தார்கண் இல்.- 287

அளவறிந்து வாழ்பவர்கள் திருடி வாழ மாட்டார்கள்

அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்

களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு.-288

அறவழியையும், தீயோர் வஞ்சனையும் கொள்வா்

அளவுஅல்ல செய்தாங்கே வீவர் களவுஅல்ல

மற்றைய தேற்றா தவர்.-289

களவு வாழ்வு நெடுங்காலம் நீடிக்காது

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்

தள்ளாது புத்தேள் உலகு.-290

திருடர் அழிவையும், நல்லவர்கள் நல்வாழ்வையும் அடைவா்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக