வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 37. அவா அறுத்தல்


அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்

தவாஅப் பிறப்புஈனும் வித்து.  - 361

மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு ஆசையே விதையாகிறது

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும். - 362

ஆசையைத் துறப்பதே மீண்டும் பிறாவமலிருப்பதற்கான வழி

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை

ஆண்டும் அஃதொப்பது இல். - 363

ஆசையற்ற நிலையே பெருஞ்செல்வம், அதற்கிணை வேறில்லை

தூஉய்மை என்பது அவாஇன்மை மற்றது

வாஅய்மை வேண்ட வரும்.-364

வாய்மையே தூய்மையான ஆசையின்மையை அடையும் வழி

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்

அற்றாக அற்றது இலர்.- 365

ஆசையை துறந்தவரே மெய்யான  துறவியராவர்

அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை

வஞ்சிப்பது ஓரும் அவா. - 366

ஒருவரை வஞ்சிப்பது ஆசையே, அதனால் ஆசைக்கு அஞ்சி வாழ்

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை

தான்வேண்டும் ஆற்றான் வரும். -367

ஆசையைத் துறந்தால் நல்வினை தானே வரும்

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்

தவாஅது மேன்மேல் வரும். -368

ஆசை உண்டானால் துன்பம் மேலும்மேலும் வரும்

இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்

துன்பத்துள் துன்பம் கெடின். -369

பேராசையைத் துறந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்.- 370

ஆசையற்ற நிலையே பேரின்ப நிலை

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக