வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 53 சுற்றம் தழால்

 


பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்

சுற்றத்தார் கண்ணே உள. - 521

வறுமையின்போதும் உடன் இருப்பவரே சுற்றத்தார்

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா

ஆக்கம் பலவும் தரும்.- 522

அன்பான சுற்றமே வளர்ச்சி பலவற்றுக்கும் துணையாகும்

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாத்

கோடின்றி நீர்நிறைந் தற்று.- 523

சுற்றமில்லாதான் செல்வம் கரையிலா குளம் நிறைந்தது போன்றது

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்

பெற்றத்தால் பெற்ற பயன்.- 524

செல்வம் பெற்றது சுற்றத்தைக் காப்பதற்கே

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய

சுற்றத்தால் சுற்றப் படும். - 525

ஈதல், இன்சொல் இரண்டும் உடையான் சுற்றம் சூழ வாழ்வான்

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்

மருங்குடையார் மாநிலத்து இல்.-526

ஈகையுடன், சினமில்லாதவனுக்குப் பெருஞ்சுற்றம் கூடும்

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள.- 527

காக்கையைப் போல சுற்றம் பகிர்ந்துண்பாருக்கே உயர்வு உண்டு 

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர்.- 528

தனித்தன்மை அறிந்த மன்னனிடம் சுற்றம் விரும்பி வாழும்

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்

காரணம் இன்றி வரும்.- 529

பிரிந்த உறவும் அதன் காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்

இழைத் திருந்து எண்ணிக் கொளல்.- 530

நீங்கியவன் மீண்டும் தன்னிடம் வந்தால் ஆராய்ந்த பின் சேர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக