வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 29 அக்டோபர், 2020

திருக்குறள்- அதிகாரம் - 74. நாடு

 


தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு. - 731

நல்ல விளைபொருள், பெரியோர், நற்செல்வர் நிறைந்ததே நாடு

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டான்

ஆற்ற விளைவது நாடு. - 732

பொருள் வளத்தால் பிறநாட்டாரும் விரும்புவதே நாடு    

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு

இறையொருங்கு நேர்வது நாடு. - 733

செலவுகளிருந்தாலும் மகிழ்வோடு மக்கள் வரிதருவது சிறந்த நாடு

உறுபசியும் ஒவாப் பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு. - 734

கடும்பசி, தீராத நோய், பெரும் பகை இல்லாததே நாடு

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு.- 735

பிரிவுகள், உட்பகையும், கொடியோரரரும் இல்லாதது நாடு

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா

நாடென்ப நாட்டின் தலை. - 736

கேடு வந்தாலும், வளம் குன்றாதிருப்பது நாடு

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.-737

ஆற்றுநீர், ஊற்றுநீர், மலை, மழை, அரண் ஆகியன நாட்டிற்கு அணி

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிற் கிவ் வைந்து. - 738

நோயின்மை, செல்வம், விளைச்சல், இன்பம், காவல் நாட்டிற்கு அழகு

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந்தரு நாடு.      -739

பிற நாடுகளைச் சாராமல் பல வளங்களையும் கொண்டதே நாடு

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே

வேந்தமை வில்லாத நாடு. -740

நல்ல அரசனால்தான் நல்வளங்கள் மக்களைச் சென்றடையும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக