வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 30 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 75. அரண்

 


ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்

போற்று பவர்க்கும் பொருள். - 741

எதிர்ப்பவர்களுக்கும், அஞ்சுபவர்களுக்கும் பாதுகாவல் அரண்

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடைய தரண். -742

அகழியும், மண்ணும், மலையும், நிழல் தரும் காடும் உடையது அரண்

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்

அமைவரண் என்றுரைக்கும் நூல். - 743

உயரம், அகலம், உறுதி, எதிரிகளால் அழிக்க இயலா தன்மையது அரண்

சிறுகாப்பின் பேரிடத்த தாகி உறுபகை

ஊக்கம் அழிப்ப தரண். - 744

கோட்டை பெரிதாகவும், அதன் வாசல் சிறிதாகவும் அமைவதே அரண் 

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்

நிலைக்கௌiதாம் நீரது அரண். -745

பகைவா்க்கு அரிதாகவும், தமக்கு வசதியாகவும் அமைவது நல்லரண்  

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்

நல்லாள் உடையது அரண். - 746

வீரர்களையும், அவர்களின் தேவைகளையும் நிறைவுசெய்வது அரண்  

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்

பற்றற் கரியது அரண்.-747

முற்றுகையிலோ, சூழ்ச்சியிலோ வெல்லமுடியாததே நல்ல அரண் 

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்

பற்றியார் வெல்வது அரண்.-748

பெரும்படையாலும் அழிக்கமுடியாததே அரண்

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து

வீறெய்தி மாண்ட தரண். - 749

பகைவரை எளிதில் வீழ்த்துமாறு அமைவது அரண்

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி

இல்லார்கண் இல்லது அரண்.- 750

அரண் பல சிறப்புக்கொண்டிருந்தாலும், நல்ல வீரர்களே அதற்கு சிறப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக