வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 22 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்


 

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். - 691

நெருப்பில் குளிர்காய்வதுபோல் அரசனிடம் அணுகாது, அகலாது பழகு

மன்னர் விழைப விழையாமை மன்னரான்

மன்னிய ஆக்கந் தரும்.- 692

மன்னர் விரும்புவதைத் தான் விரும்பாதாரே அவருடன் நிலைப்பார்  

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்

தேற்றுதல் யார்க்கும் அரிது. -693

ஆட்சியாளருடன் பழகுவோர் சந்தேகத்திற்கு இடமின்றி நடக்கவேண்டும்     

செவிச் சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்

ஆன்ற பெரியா ரகத்து.- 694

பெரியவா்கள் முன்பு, காதோடு பேசுதல், சிரித்தலும் தவிர்ப்பது நலம்  

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை

விட்டக்கால் கேட்க மறை.- 695

அரசன் மறைக்கும்போதும், சொல்லும்போதும் அதற்கேற்ப புரிந்த நட  

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில

வேண்டுப வேட்பச் சொலல். - 696

குறிப்பையும், காலத்தையும் அறிந்து மன்னர் விரும்புமாறு கூறு

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்

கேட்பினும் சொல்லா விடல்.- 697

அரசனே கேட்டாலும் பயனுள்ளவை மட்டுமே சொல்லுக 

இளையார் இனமுறையர் என்றிகழார் நின்ற

ஒளியோடு ஒழுகப் படும். - 698

வயதோ, உறவோ, ஆட்சியாளர் முன் பார்க்காது பதவியைப் பார்

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்

துளக்கற்ற காட்சி யவர்.- 699

அரசர்க்கு நம்பிக்கையுரியோர் அவர் விரும்பாததைச் செய்யார்

பழையும் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்

கெழுதகைமை கேடு தரும். - 700

நெடுங்காலம் பழகினாலும் பண்பில்லாதவை செய்யாதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக