வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 60. ஊக்கம் உடைமை


 

உடையரெ எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்

உடையது உடையரோ மற்று.- 591

ஊக்கத்தைத் தவிர பிற உடைமைகள் பெரிதல்ல

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும்.- 592

பொருளுடைமை நீங்கிவிடும், ஊக்கமாகிய உடைமை நீங்காது   

ஆக்கம் இழந்தேமெனறு அல்லாவார் ஊக்கம்

ஒருவந்தம் கைத்துடை யார்.- 593

பெருஞ்செல்வத்தை இழந்தாலும் மனவுறுதியுடையார் கலங்கார்

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்க முடையா னுழை.- 594

ஊக்கமுடையவரிடம் செல்லும் வழிகேட்டு செல்வம் வந்து சேரும்

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.- 595

நீரளவுக்கு மலர் நீளும், ஊக்கத்தின் அளவே உயர்வு அமையும்

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.- 596

கிடைக்காவிட்டாலும் உயர்வாக எண்ணுவதே என்றும் உயர்வு

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்

பட்டுப்பா டன்றுங் களிறு. - 597

அம்பு தைத்தும் கலங்காத யானைபோல துன்பத்தில் கலங்காதிரு  

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

வள்ளியம் என்னுஞ் செருக்கு.- 598

ஊக்கமுடையவருக்கே ஈகைப் பண்பு என்னும் செருக்கு இருக்கும் 

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை

வெரூஉம் புலிதாக் குறின்.- 599

ஊக்கமுடைய புலியிடம், பெரிய யானையும் தோற்றுவிடும்

உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃ தில்லார்

மரம்மக்க ளாதலே வேறு.- 600

ஊக்கமில்லாதவர்கள் மரத்துக்கு ஒப்பானவர்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக