வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 23 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 71. குறிப்பறிதல்

 


கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக்கு அணி.- 701

குறிப்பறிந்து நடப்பவன் கடல்சூழ் உலகிற்கு அணியாவான்              

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்

தெய்வத்தோ டொப்பக் கொளல். - 702

ஐயமின்றி ஒருவர் உள்ளத்தை அறிபவன் தெய்வத்துக்கு சமமாவான் 

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்

யாது கொடுத்தும் கொளல். 703

முகக்குறிப்பால் அகத்தை உணர்வாரை எப்படியும் துணையாகக் கொள்

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை

உறுப்போ ரனையரால் வேறு. - 704

தோற்றத்தில் ஒத்திருந்தாலும், அறிவால் வேறுபட்டவர் குறிப்பறிவார்   

குறிப்பின் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்

என்ன பயத்தவோ கண். -705

முகக்குறிப்பால் அகத்தை உணராவிட்டால் கண்களால் யாது பயன்?   

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம். - 706

முகமே மனதைக் காட்டும் கண்ணாடி

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்

காயினும் தான்முந் துறும். -707

இன்ப, துன்பங்களை விரைந்து வெளிப்படுத்திவிடும் முகம்

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி

உற்ற துணர்வார்ப் பெறின். -708

முகத்தைப் பார்த்தே அகத்தை உணர்வாரிடம் வார்த்தைகள் எதற்கு   

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்

வகைமை உணர்வார்ப் பெறின். - 709

பகையையும், நட்பையும் கண்களே காட்டிவிடும்

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்

கண்ணல்லது இல்லை பிற. -710

கண்களால் கருத்தை உணர்பவரே நுண்ணறிவாளர் எனப்படுவார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக