வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 28 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 73. அவையஞ்சாமை

 


வகையறிந்து வல்லமை வாய்சோரார் சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர். - 721

நல்ல பேச்சாளர், அச்சத்தினால் தவறாகப் பேசமாட்டார்கள்

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்

கற்ற செலச்சொல்லு வார். -722

கற்றோரும் போற்றுமாறு பேசுவோர் கற்றோருள் கற்றோராவார்

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்

அவையகத்து அஞ்சா தவர். - 723

போருக்கு அஞ்சாதார் எளியவர், அவையில் அஞ்சாதாரே அரியவர்

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற

மிக்காருள் மிக்க கொளல்.- 724

தெரிந்ததைப் புரியுமாறு, கூறி தெரியாததை  கேட்டு அறிக

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா

மாற்றங் கொடுத்தற் பொருட்டு.- 725

நற்சபையில் அஞ்சாமல் பேச, நல்ல நூல்களைப் படி

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்

நுண்ணவை அஞ்சு பவர்க்கு. - 726

கோழைக்கு வாள் எதற்கு? அவையஞ்சுவோருக்கு நூல் எதற்கு?   

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து

அஞ்சு மவன்கற்ற நூல்.- 727

அவையயஞ்சுபவனின் அறிவு பேடியின் வாளுக்குச் சமம்

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்

நன்கு செலச்சொல்லா தார்.- 728

பேச்சுத்திறன் இல்லாதவர்கள் பல கற்றாலும் பயனில்லை

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்

நல்லா ரவையஞ்சு வார்.- 729

அவையச்சம் கொள்வோர், கல்லாதாரைவிடக் கீழானவர்

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்

கற்ற செலச்சொல்லா தார்.- 730

அவையச்சம் கொள்வோர், வாழ்ந்தும் பயனில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக