வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 5 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 54 பொச்சாவாமை

 



இறந்த வெகுளியின் தீதே சிறந்த

உவகை மகிழ்ச்சியின் சோர்வு. - 531

பெருமகிழ்ச்சியில் தோன்றும் மறதி பெருங்கோபத்தைவிடத் தீது

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை

நிச்ச நிரப்பக் கொன் றாங்கு.- 532

வறுமை அறிவைக் கொல்வதுபோல, மறதி புகழைக் கொல்லும்  

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து

எப்பால்நூ லோர்க்கும் துணிவு.- 533

மறதியுடையவர்களுக்கு புகழ் கிடைப்பதில்லை

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை

பொச்சாப் புடையார்க்கு நன்கு.- 534

பயமுடையவர்க்கும், மறதியுடையவர்க்கும் பாதுகாப்பார் பயனில்லை

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை

பின்னூறு இரங்கி விடும்.- 535

வருமுன் காக்க மறந்தவன் தன் தவறுக்காக பின்னர் வருந்துவான்  

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை

வாயின் அஃதுவொப்பது இல்.- 536

யாராக இருந்தாலும் மறதியின்றி இருத்தல் மிகச் சிறந்த பண்பு

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்

கருவியால் போற்றிச் செயின். - 537

மறக்காமல், ஆர்வத்துடன் செய்பவர்க்கு எச்செயலும் மிக எளிது

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது

இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.- 538

நற்செயல்களை மறந்தார்க்கு ஏழ்பிறப்பும் உயர்வு இல்லை

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.- 539

தன்னை மறந்த மகிழ்ச்சியால் அழிந்தவரை மகிழும்போது நினை

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்

உள்ளியது உள்ளப் பெறின்.-540

எண்ணங்கள் வலிமையாக இருந்தால் இலக்கை அடைவது எளிது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக