வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 8 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 57. வெருவந்த செய்யாமை


 

தக்காங்கு நாடிச் தலைச்செல்லா வண்ணத்தால்

ஓத்தாங்கு ஒறுப்பது வேந்து. - 561

மீண்டும் குற்றம் செய்யாதபடி தண்டிபவனே வேந்தன்

கடிதோச்சி மெல்ல ஏறிக நெடிதாக்கம்  

நீங்காமை வேண்டு பவர். - 562

கடுமையாக தண்டிப்பதுபோல மென்மையாக தண்டிப்பவரே நல்லோர்

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும். - 563

கொடுங்கோலாட்சி நெடுங்காலம் நிலைக்காது கெட்டொழியும்         

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்

உறைகடுகி ஒல்லைக் கெடும். - 564

மக்களை அச்சப்படுத்தும் அரசன் விரைவில் கெடுவான்

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்

பேஎய்கண் டன்னது உடைத்து. - 565

இன்னாத செய்யும் அரசனின் செல்வம், பேயைப் போன்றே தோன்றும்  

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்

நீடின்றி ஆங்கே கெடும்.-566

கடுஞ்சொல்லும், கருணையில் இல்லாதவன் செல்வம் நீடிக்காது     

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்

அடுமுரண் தேய்க்கும் அரம்.- 567

கடுஞ்சொல், நீதியிலா தண்டனை அரசனின் புகழை தேய்க்கும் அரம்   

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்

சீறிற் சிறுகும் திரு.- 568

ஆலோசிக்காது முடிவெடுக்கும் வேந்தன் கோபம் கொண்டு அழிவான்  

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்

வெருவந்து வெய்து கெடும்.- 569

முன்பே பாதுகாவல் செய்யாத வேந்தன் அஞ்சியே அழிவான்

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது    

இல்லை நிலக்குப் பொறை.- 570

கொடுங்கோலாட்சி செய்யும் கல்லாதார் கூட்டமே, பூமிக்கு பெருஞ்சுமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக