வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 13 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 62. ஆள்வினையுடைமை

 


அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும். -611

அரிய செயலும் முயன்றால் வெற்றி தரும்

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை

தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.- 612

எச்செயலையும் இடையில் விட்டவரை இவ்வுலகம் விட்டுவிடும்

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே

வேளாண்மை என்னுஞ் செருக்கு.- 613

முயற்சி என்ற பண்பே, உதவுதல் என்ற மேன்மையின் இருப்பிடம்

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை

வாளாண்மை போலக் கெடும்.- 614

ஊக்கமில்லாதவன் செய்யும் உதவி, பேடி கை வாள் போன்றது   

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

துன்பம் துடைத்தூன்றும் தூண்.- 615

இன்பத்தைவிட செயலை விருப்புபவனே உறவினர்க்கு தூணாவான்

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.- 616

செல்வத்துக்கு அடிப்படை முயற்சி, முயற்சியின்மையே வறுமை

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாளுளாள் தாமரையி னாள்.- 617

முயல்பவரிடம் திருமகளும், முயலாதவரிடம் மூதேவியும் தங்குவர்

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து

ஆள்வினை இன்மை பழி.- 618

உடல் உறுப்புக் குறைகள் குறைகளல்ல, அறிய முயலாமயே குறை

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.- 619

தெய்வத்தால் ஆகாததும் முயற்சித்தால் கைகூடும்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்.- 620

தொடர்ந்த முயற்சி விதியையும் மாற்றிவிடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக