வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 1 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 102. நாணுடைமை

 


கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்

நல்லவர் நாணுப் பிற. -  1011

தீய செயலுக்கு நாணுதல், பெண்களின் நாணத்தில் வேறுபட்டது      

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல

நாணுடைமை மாந்தர் சிறப்பு. - 1012

உணவு, உடை மனிதர்க்குப் பொது. நாணமே நல்ல மனிதர்க்கு அணி 

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்

நன்மை குறித்தது சால்பு. - 1013

உயிர்க்கு உடல் போன்றது, சான்றோர்க்கு நாணம்

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்

பிணிஅன்றோ பீடு நடை. - 1014

சான்றோர்க்கு நாணமே அணி. நாணமில்லாதவர்க்கு பீடுநடையில்லை

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு

உறைபதி என்னும் உலகு. - 1015

பிறர் பழிக்கும், தம்பழிக்கும் நாணுவோர் நாணத்தின் உறைவிடமாவர்

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்

பேணலர் மேலா யவர். - 1016

பரந்த உலகை விட நாணத்தையே வேலியாக் கொள்வோர் சான்றோர்

நாணால் உயிரைத் துறப்பார் உயிர்ப்பொருட்டால்

நாண்துறவார் நாணாள் பவர். - 1017

உயிரைவிட நாணமே பெரிதென உயிரையும் விடுவோர் உயர்ந்தோர்  

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்

அறம்நாணத் தக்கது உடைத்து. - 1018

வெட்கப்படவேண்டியதற்கு வெட்கப்படாதவனைக் கண்டு அறம் நாணும்

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்

நாணின்மை நின்றக் கடை.- 1019

கொள்கையில் குலப்பெருமையும், நாணத்தில் எல்லா நலமும் உண்டு

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை

நாணால் உயர்மருட்டி யற்று.  - 1020

நாணமற்றோர் இயங்குதல் மரப்பொம்மைக்கு உயிரூட்டியது போன்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக